search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்
    X

    பாபநாசம் பேரூராட்சியில் கலந்தாய்வு கூட்டம்.

    பாபநாசம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்

    • பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் நிறைவேற்றுவது குறித்து பேரூராட்சி கவுன்சிலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார்.

    பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணை தலைவர் பூபதிராஜா, உதவி பொறியாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டு களிலும் நடை பெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிப்பது எனவும், மேலும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் என்னென்ன பணிகள் நிறைவேற்ற பட வேண்டும் எனவும் பேரூராட்சி கவுன்சிலர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

    பேரூராட்சி கவுசிலர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் திட்ட ப்பணிகள் நிறைவேற்றப்படும் என பேரூராட்சி தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் 15 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணியினை தினந்தோறும் பொது சுகாதார பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும்,

    மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை சுத்தம் செய்தும் குளோரினேசன் செய்தும் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் எனவும், மின்விளக்கு வசதியினை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் பேரூராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்த பட்டது. பொது சுகாதார பணியாளர்கள் அனைவரின் குறைகளையும் கேட்டறியப்பட்டுது. அவர்களது குறைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றிபடும் எனவும் செயல் அலுவலர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், கீர்த்திவாசன், ஜாபர் அலி, பிரகாஷ், பாலகிருஷ்ணன், தேன்மொழி, விஜயா, சமீரா பர்வீன், சுகாதார பரமசிவம், சுகாதர மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள், பொதுசுகாதார பணியா ளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×