என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

    • ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்த பண்டிகை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் தேவாலயங்கள், கிறிஸ்தவ சபைகளில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நெல்லை:

    ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்த பண்டிகை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் தேவாலயங்கள், கிறிஸ்தவ சபைகளில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாவட்டங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு, பலவண்ண, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை அமைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு திருப்பலிகள்

    தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். பாளையில் உள்ள மிக பழமை வாய்ந்த தேவாலயமான தூய சவேரியர் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு பாளை மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    தென்னிந்திய திருச்சபை சார்பில் பாளை முருகன்குறிச்சியில் உள்ள கதீட்ரல் ஆலயத்தில் இன்று அதிகாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசாரம் நடைபெற்றது. முடிவில் அனை வருக்கும் கேக் வழங்கப்பட்டது.

    பிரார்த்தனை

    இதேபோல் பாளை சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணி யார் ஆலயத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைக்கு பிறகு கிறிஸ்தவர்கள் அதனை பார்த்து சென்றனர்.

    மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பர் ஆலயம், சாந்திநகர் குழந்தை ஏசு ஆலயம், நெல்லை அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    தென்காசி

    தென்காசி மாவட்ட த்தில் உள்ள கத்தோலிக்க ஆல யங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின்போது 11.59 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விண்ணில் இருந்து நட்சத்திரம் இறங்கி வருவது போன்ற காட்சிகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பிரார்த்தனைக்கு பின்னர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தூத்துக்குடி சின்ன கோவிலில் ஆர்.சி. பிஷப் ஸ்டீபன் தலைமையில் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கப்பட்டது.பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

    இதேபோல் டூவிபுரம், பிரையண்ட் நகர், மட்டக்கடை, சண்முகபுரம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து சி.எஸ்.ஐ. சர்ச்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் தேவாலாயங்கள் மின்னொளியில் ஜொலித்தன.

    Next Story
    ×