search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
    X

    பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்த காட்சி. (உள்படம்: அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்).

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்ச வம் கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்ச வம் கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோபாலா... நாராயணா.. என கோஷங்கள் இட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை யொட்டி காலையில் மலர் அலங்காரத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். வரதராஜ பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருத்தேர் 32 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் 52 தூண்களும், 6 சக்கரங்களுடன் 5 அடுக்கு அதிர்ஷ்டானமும், 340 சிற்பங்களும், 4 குதிரைகளும் பொலிவுடன் உள்ளன.

    Next Story
    ×