என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் கலவரம் கைது எண்ணிக்கை 357 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே கனியாமூர்சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி யில் நடந்த கலவரம் தொட ர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் தொடர்புடைய குற்றவா ளிகளை தேடி வருகிறார்கள்.
அந்த வகையில் காவல்துறை வாகனத்தின் மீது கல் எறிந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் கிராமம் இந்திரா நகர் ராம்குமார் என்கின்ற ராம்கி என்பவர் வாட்ஸ் அப் குழுக்களில் இடம்பெற்று வன்மத்தை தூண்டும் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.
கலவரத்திலும் பங்கு பெற்று பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் வட்டம் உலகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கைதனார்.
இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறித்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு, கைது செய்து இவர்களை கள்ள க்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கை தொட ரும் எனவும் அறிவித்து ள்ளனர்.
இதனால் கைது எண்ணி க்கை 357 ஆக அதிகரித்து உள்ளது.