search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    காயல்பட்டினத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார்.
    • ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முத்துமுகம்மது தலைமை தாங்கினார்.

    ஆணையாளர் குமார் சிங், துணைத்தலைவர் சுல்தான் லெப்பை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கட்டாய கல்வி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு மாவட்ட பாதுகாப்பு குழுவை அணுகி அரசு வழிகாட்டுதலுடன் தத்தெடுப்பது, ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காயல்பட்டினம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×