என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- காரையூரில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
- கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி சென்னையில் இருந்து புறப்பட்டு 7-ந் தேதி மதுரை செல்லும் அவர், இரவில் மதுரையில் தங்குகிறார்.
மறுநாள் காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்துக்கு முதலமைச்சர் செல்கிறார். அங்கு 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரையூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும், முதலமைச்சர், திட்டங்களை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு, மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்