நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி
Published on

நெல்லை, ஜூலை:

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட பகுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று போட்டி நடைபெற்றது.

அதனை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சாப்டர் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com