search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி
    X

    போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள்.

    ஸ்ரீவைகுண்டத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி

    • ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டார அளவிலான போட்டிகள் ஸ்ரீவைகுண்டம் ஆதிகுமரகுருபரசுவாமிகள் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.
    • 6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்விதுறை சார்பாக செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டார அளவிலான போட்டிகள் ஸ்ரீவைகுண்டம் ஆதிகுமரகுருபரசுவாமிகள் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.

    6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவி சினேகவள்ளி பாலமுருகன், துணைத்தலைவர் கண்ணியம்மாள், பேரூராட்சி உறுப்பினர் பிரேம்குமார் சமூகஆர்வலர் சந்துரூ, வக்கீல் அமிர்தவள்ளி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் செல்வகுமார், மரீயஜெபசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் இக்னேஷ்யல் சுமதி வரவேற்றார். போட்டியில் 252 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×