search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பஸ்கள்
    X

    நீலகிரியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பஸ்கள்

    • இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
    • 186 நாடுகளை சோ்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

    ஊட்டி:

    ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரம் மற்றும் விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பள்ளி பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தாா்.பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 186 நாடுகளை சோ்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

    இதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் 3 தனியாா் பள்ளி பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் 'நம்ம செஸ், நம் பெருமை', 'இது நம்ம சென்னை, நம்ம செஸ்' - 'வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு' போன்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன், நகராட்சி ஆணையா் காந்திராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் தினேஷ்குமாா், ஊட்டி தாசில்தார் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×