search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலாண்டு தேர்வு வினாத்தாளை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு
    X

    கோப்பு படம்

    காலாண்டு தேர்வு வினாத்தாளை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு

    • 6,8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கணிததேர்வில் 9-ம் வகுப்பு வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
    • வினாத்தாள் வருவதற்கு தாமதமான கால அளவை கொண்டு மாணவர்களுக்கும் தேர்வு எழுத கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று கணித பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. 6,8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கணிததேர்வில் சிறிய, பெரிய 9 வினாக்கள் 9-ம் வகுப்புக்குரிய 2-ம் பருவத்திற்கு உட்பட்ட பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்ததும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேர்வு அறையில் இருந்த ஆசிரியர்களிடம் மாணவர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது வினாத்தாள் மாற்றி கொடுத்தது தெரியவரவே அவர்களுக்குரிய வினாத்தாள் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டது.

    அதனைெதாடர்ந்து மாணவர்கள் பதட்டமின்றி தேர்வு எழுதினர். வினாத்தாள் வருவதற்கு தாமதமான கால அளவை கொண்டு மாணவர்களுக்கும் தேர்வு எழுத கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×