search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் 25-ந்தேதி வரை அமல்
    X

    மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் 25-ந்தேதி வரை அமல்

    • பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • ரெயில் சேவையில் இன்று 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    *மூர் மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    *பட்டாபிராம் மிலிட்டரி - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்டிரல் இடையேயும், சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-வியாசர்பாடி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டி - சென்டிரல் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்- பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கொருக்குபேட்டை-சென்டிரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.

    * சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.45 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்.

    * சென்டிரல் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×