search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
    X

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

    • 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் வென்றனர்.
    • ரூ. 2 ஆயிரத்து 500 ரொக்கம், சான்றிதழ்கள் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுஜரித்தா மாக்டலின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

    கல்லூரியில் வணிகவியல் துறையில் பயிலும் லோகேஷ்வரன், மோகன்ராஜ் மற்றும் ராம்ஜி ஆகிய மாணவர்கள் திருவாரூர் சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி நடத்திய 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் வென்று 2500 ரூபாய் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்ததை பாராட்டி வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வரும், வணிகவியல் துறைத் தலைவருமான அன்வர் அஹமது, முனைவர் சாவித்திரி. வணிகவியல் துறை பேராசிரியர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுஜரித்தா மாக்டலினை வாழ்த்தினர்.

    Next Story
    ×