என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டில் தூங்கியவரிடம் செல்போன்,பணம் திருட்டு-2 பேர் கைது
- நாகராஜ் வைத்திருந்த செல்போனை 2 மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
- கருத்தபாண்டி என்ற கார்த்தி,மருதுராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழ ஆம்பூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 26). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவர் தலைக்கு பக்கத்தில் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடிச்சென்றனர். அதில் அவர் ரூ.3 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.
இந்நிலையில் செல்போன் திருட்டு போனது குறித்து அவர் அளித்த புகாரில் ஆழ்வார்க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி அதே கிராமத்தில் வசிக்கும் கருத்தபாண்டி என்ற கார்த்தி மற்றும் இடைகாலை சேர்ந்த மருதுராஜ்(வயது 20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். கைதான கார்த்தி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






