search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூரில் செல்போன் கடை ஊழியருக்கு கத்திக்குத்து
    X

    முத்தூரில் செல்போன் கடை ஊழியருக்கு கத்திக்குத்து

    • ரூ.10 ஆயிரத்திற்கு செல்போன் ஒன்றை அவரது மனைவி மல்லிகா பெயரில் வாங்கியுள்ளார்.
    • சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    வெள்ளகோவில் :

    சிவகங்கை மாவட்டம், காட்டனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் வீரராஜா (வயது 34). இவர் தனது மனைவியுடன் வெள்ளகோவில், காந்தி நகர் பகுதியில் குடியிருந்து கொண்டு முத்தூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார்.

    செல்போன் கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முத்தூர் அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (40) என்பவர் ரூ.10 ஆயிரத்திற்கு செல்போன் ஒன்றை அவரது மனைவி மல்லிகா பெயரில் வாங்கியுள்ளார்.

    வாங்கிய செல்போன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதை மாற்றி கொடுக்குமாறு செல்போன் கடையில் வேலை செய்யும் வீரராஜாவிடம் போன் மூலம் கேட்டுள்ளார், அதற்கு வீரராஜா நேரில் வந்து கடை ஓனரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் மாலை 4 மணி அளவில் முத்தூர் செல்போன் கடைக்கு வந்து வீரராஜாவிடம் செல்போனை மாற்றி கொடுக்க வேண்டுமாறு அன்பழகன் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதில் அன்பழகன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரராஜா வயிற்றில் குத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    காயமடைந்த வீரராஜா தற்போது கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    Next Story
    ×