search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா
    X

    அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா

    • தேர்த்திருவிழாவின் இறுதி நாளான நேற்று வின்சென்ட் குமார் தலைமையில் கூட்டுத்திருபலி நடை பெற்றது.
    • மாலை வண்ண, வண்ண விளக்கு களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் பவனி தருமபுரி மறை மாவட்ட இயக்குநர் ஜாக்சன் லூயிஸ்சால் மந்தரிக்கப்பட்டு தேவால யத்தை சுற்றி வலம் வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேர்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

    7, 8 ஆகிய 2 நாட்களில் ஜெபவழிபாடும், திருப்பலியும் வேலுர் மறை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தேர்த்திருவிழாவின் இறுதி நாளான நேற்று வின்சென்ட் குமார் தலைமையில் கூட்டுத்திருபலி நடை பெற்றது. மாலை வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர்பவனி தருமபுரி மறை மாவட்ட இயக்குநர் ஜாக்சன் லூயிஸ்சால் மந்தரிக்கப்பட்டு தேவாலயத்தை சுற்றி வலம் வந்தது.

    இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுண்டம்பட்டி, புஷ்பகிரி மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் வாழும் கிறிஸ்தவ மக்கள் கலந்துக்கொண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×