search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பி.எஸ்.இ. தேர்வில் மாணவர்கள் சாதனை
    X

    சி.பி.எஸ்.இ. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    சி.பி.எஸ்.இ. தேர்வில் மாணவர்கள் சாதனை

    • 10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
    • தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தாமரை பன்னாட்டுப்பள்ளி தஞ்சாவூர் மற்றும் கும்பக்கோணம் ஆகிய இரு பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    12-ம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 69 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 212 மாணவர்களும் பெற்றுள்ளனர். தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார். 6 மாணவர்கள் வேதியியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 474/500 மதிப்பெண் பெற்று ஸ்ரீராம் முதலிடத்தையும், விஜய் ஸ்ரீனிவாஸ், மாலிகா ஆகியோர் 473/500 பெற்று இரண்டாம் இடத்ைதயும் பெற்றுள்ளனர்.

    10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஹிபாநாஸ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் ஆங்கிலத்திலும், 2 மாணவர்கள் தமிழ்ப் பாடத்திலும், 1 மாணவர் சமூக அறிவியலிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் 483/500 மதிப்பெண் பெற்று ஹரி பிரானேஷ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

    சதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×