search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை முயற்சி வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத 4 பேர் மீது வழக்கு பதிவு
    X

    கொலை முயற்சி வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத 4 பேர் மீது வழக்கு பதிவு

    • சீனிவாசன், மது ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
    • இருவர் மீதும் தளி போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே ஆனேக்கல் சங்கரனார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது35). பெங்களூரு கொத்தநாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மது (36). இவர்கள் இருவர் மீதும் தளி போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

    இந்த வழக்கில் கடந்த 2015 நவம்பர் 5ம் தேதி, இருவரும் ஜாமீன் பெற்றனர். அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.

    இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நீதி மன்ற தலைமை எழுத்தர் செல்வராஜ், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சீனிவாசன், மது ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    அதே போல், தளி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (46). பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் அருகே, ஹூப்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார் (40).

    இருவர் மீதும் தளி போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் 2002 ஆகஸ்ட் 26-ம் தேதி, இருவரும் ஜாமீன் பெற்றனர்.

    பின்னர், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் நாராயணசாமி, விஜயகுமார் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

    Next Story
    ×