என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் - 2 பேர் படுகாயம்
    X

    நாங்குநேரி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் - 2 பேர் படுகாயம்

    • ராமர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு செங்குளத்தை சேர்ந்தவர் ராமர் (வயது24). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இளையாமுத்தூர் விலக்கு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் ராமர், ஆபிரகாம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×