என் மலர்
உள்ளூர் செய்திகள்

'கல்பனா சாவ்லா' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விளையாட்டு அலுவலர் தகவல்
‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
எனவே சேலம் மாவட்டத்தில் துணிச்சல், தைரியமான மற்றும் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற வருகிற 20-ந்தேதிக்குள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






