search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர்  ஆதித்தனார் கல்லூரியில் வளாகத்தேர்வு
    X

    தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பாராட்டினார்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாகத்தேர்வு

    • 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடைபெற்றது.
    • பிரான்சிஸ் டேவின் போன்வி 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பாக பல துறைகளை சேர்ந்த 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கணிப்பொறியியல் துறை சேர்ந்த ஞானமூர்த்தி, பரமேஸ்வர், பால சதீஷ், கங்காதரன், கார்த்திக் சிவராம், கணிதத் துறையை சேர்ந்த மகாராஜா, பேச்சிமுத்து மற்றும் கணிப்பொறியியல் துறை சுயநிதிப்பிரிவை சேர்ந்த விமல், ஈஸ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    டைசின் கம்பூயூட்டிங் நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியும், நிறுவனருமான சுவிச்சர்லாந்தை சேர்ந்த பிரான்சிஸ் டேவின் போன்வி தேர்வான 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். தேர்வானவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×