என் மலர்
உள்ளூர் செய்திகள்

தம்பியை தாக்கிய அண்ணன் கைது
- புளிய மரத்தில் ஏறி கோபாலப்பா புளியம்பழம் பறித்துள்ளார்.
- தகராறில் ஈடுபட்டுள்ளார் பின்னர் கையாலும், கற்களாலும் தாக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள சி.ஆர். பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலப்பா. இவரது அண்ணன் ஜெய்கிருஷ்ணப்பா.
இவர்களுக்கு சொந்தமான புளிய மரத்தில் ஏறி கோபாலப்பா புளியம்பழம் பறித்துள்ளார். இதை அவரது அண்ணன் கண்டித்து பறிக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கையாலும், கற்களாலும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கோபாலப்பா தேன்கனி கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
து குறித்து கோபாலப்பா தந்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய் கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.
Next Story






