search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
    X

    சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

    • நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை.
    • சிறுவன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகன் மகேந்திரன்(வயது 17) பார்வை திறன் குறைபாடு உடையவர்.

    அவர் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு கிளி, புறா உள்ளிட்டவற்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கிணறு, மரங்களில் இருக்கும் புறா உள்ளிட்டவற்றை எடுத்து வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை. இன்று அதிகாலை தேடிபார்த்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மகேந்திரன் இறந்து மிதந்துக்கொண்டிருந்தான்.

    உடனே சுரண்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×