search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் புத்தகத் திருவிழா - கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்
    X

    புத்தக கண்காட்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்த காட்சி. அருகில் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் உள்ளார்.

    சுரண்டையில் புத்தகத் திருவிழா - கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்

    • தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினர்.
    • சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.

    சுரண்டை:

    சுரண்டையில் பொதுநல மன்றம் மற்றும் சமூகநல இயக்கம் சார்பில் காம ராஜர் மார்க்கெட் வணிக வளாகத்தில் 4-வது புத்தகத் திருவிழா, கண்காட்சி தொடக்க விழா நடந்தது.

    சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜர்,சமூக ஆர்வலர் தொழிலதிபர் ரத்தினசாமி, சுரண்டை கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தாசில்தார் தெய்வசுந்தரி, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் கணேசன், சேர்மச் செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம் அறிவியல் இயக்க சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 48 அரங்குகளும், 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தலைப்புகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் இடம் பெற் றுள்ளன.

    கண்காட்சியில் தினமும் பொது அறிவு போட்டி, வாசிப்பு திறன் ஊக்குவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி வினாடி-வினா,சதுரங்க போட்டி, ஓவிய போட்டி, பெண் ஆளுமைகளை கவுரவித்தல், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் ஏ.டி.என்.நடராஜன், ஆறுமுகசாமி, ஆசிரியர்கள் ஆரோக்கிய ராசு, ஜெயராம், சுரேஷ்குமார், சாதனா ரமேஷ், ஏ.டி.என் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், சாந்தி தேவேந்திரன்,சமுத்திரம்,வேல்முத்து,பேபிஜெசி,ரமேஷ்,பால்துரை மற்றும் பள்ளி,கல்லூரி பேராசிரியர்கள்,அரசு அதி காரிகள், எழுத்தாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×