search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் கிடந்த ஆண் பிணம்
    X

    காங்கயம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் கிடந்த ஆண் பிணம்

    • பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே மடவிளாகம், நந்தவனக்காடு பகுதியில் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீசாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கும் எனவும், பெயா், முகவரி போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×