search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணியாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
    X

    முற்றுகை போராட்டம் நடத்திய சாலை பணியாளர்கள் சங்கத்தினர்.

    சாலை பணியாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

    • சாலை பணியாளர்கள் பணிபுரிந்த நாட்களுக்கும் விடுப்பு துய்த்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
    • பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது என்று மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை கோட்ட பொறி யாளர் அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டும் சம்பளம் வழங்க மறுக்கும் சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தை கண்டித்தும், சங்க நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கில் பணி மாறுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டதை கண்டித்தும், சாலை பணியாளர்கள் பணிபுரிந்த நாட்களுக்கும் விடுப்பு துய்த்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

    சீர்காழி மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ர மணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றி பணி மாறுதல் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி வாசலில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களைபேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் கோரிக்கைகளை நிறைவே–ற்றாமல் பேச்சுவா ர்த்தைக்கு வரமுடியாது என்று மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் சிவபழனி, செயலாளர் இளவரசன், மாநில பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×