search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-1 மாணவர்களுக்காக சைக்கிள் தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    சைக்கிளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

    பிளஸ்-1 மாணவர்களுக்காக சைக்கிள் தயாரிக்கும் பணி தீவிரம்

    • தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் 11-ம் வகுப்பு தொடங்கியவுடன் இதனை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகள் தொடங்கி 15 நாட்களே ஆவதால் ஜூலை மாதத்தில் இலவச சைக்கிள் வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எவ்வித குறைபாடுமின்றி தரமான முறையில் சைக்கிள்களை வழங்கவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தபின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×