search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில்  இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி
    X

    சைக்கிள் போட்டியை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.


    தென்காசியில் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி

    • பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்றனர்.

    தென்காசி:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது. தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். போட்டியானது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் பள்ளியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×