search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் பென்சன் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
    X

    மூதாட்டியிடம் பென்சன் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

    • சென்னை தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் இறந்துவிட்டார்.
    • அஸ்தம்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்து பார்த்த போது பையில் இருந்த பணம் மாயமானது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 60). இவரது கணவர் ராமநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் இறந்துவிட்டார். இதனால் மல்லிகாவிற்கு அரசின் பென்சன் பணம் வருகிறது.

    சம்பவத்தன்று இவர் கணவரின் பென்சன் பணம் ரூ.27 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அஸ்தம்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்து பார்த்த போது பையில் இருந்த ரூ.27 ஆயிரம் மாயமானது தெரியவந்தது.

    பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது,.இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா இது குறித்து சேலம் டவுன் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×