search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் பெட்டிக்கடையை உடைத்த கரடிகள்
    X

    கோத்தகிரியில் பெட்டிக்கடையை உடைத்த கரடிகள்

    • வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.
    • இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டமும் அட்டகாசம் அதிகமாக காணப்படுகிறது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கேத்தரின் வாட்டர் பால்ஸ் பகுதியில் இரண்டு கிராமங்கள் உள்ளது. அங்கு இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டமும் அட்டகாசம் அதிகமாக காணப்படுவதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தற்போது நேற்று இரவு கேத்தரின் வாட்டர் பால்ஸ் வாகன நிறுத்தத்தில் ஒரு சிறிய வகை பெட்டிக்கடை ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்கடையை இரவு நேரங்களில் கரடியானது உடைத்து அதில் உள்ள தின்பண்டங்களை எடுத்து சாப்பிட்டு வருவதாகவும், இதுபோன்று கடையை உடைக்கும் நிகழ்ச்சி இதோடு மூன்றாவது தடவையாக நடப்பதாகவும் தெரிவித்தனர்.

    எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×