என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போடி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்19 Oct 2022 5:45 AM GMT
- தூய்மை இந்தியா திட்டம் வழிகாட்டுதலின்படி குப்பைகளை பிரித்து கொடுப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி:
போடி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் வழிகாட்டுதலின்படி குப்பைகளை பிரித்து கொடுப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)செல்வராணி தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி சங்கர் பேரணியை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி அசையன் உசேன் தெரு,
பரமசிவன் கோவில் தெரு மற்றும் காமராஜ் பஜார் வழியாக பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இந்த பேரணியில் நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை நகராட்சியின் சுகாதார துறை அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X