என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாண்டியாபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி சென்ற போது எடுத்த படம்.


    பாண்டியாபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி விளக்கி பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி விளக்கி பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முன்னதாக ஆசிரியர் மாரி தங்கம் வரவேற்றார். பேரணி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அழகு மகேஸ்வரி, ஏஞ்சல் மலர் மெரினா, அழகு மகேஸ்வரி, அமுதா ராணி, சிவகாமி, வர்மா, பெர்ஜிலின். கவிதா, அருணா, குருவம்மாள், ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் சகாயம் நன்றி கூறினார்.

    Next Story
    ×