search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓவேலியில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ஓவேலியில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது.

    ஊட்டி:

    கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோா், ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு பொது சுகாதாரம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்தல் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    இதையடுத்து, சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி, செயல் அலுவலா் ஹரிதாஸ் உள்பட கலந்து கொண்டனா்.

    Next Story
    ×