search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்
    X

    கோத்தகிரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

    • பெண் குழந்தைகளுக்கான பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்களை எவ்வாறு அணுக வேண்டும்.
    • மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அரவேணு:

    சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் நீலகிரி மாவட்டம் கிராமிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நடுஹட்டி ஊராட்சியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்களை எவ்வாறு அணுக வேண்டும். பெண் குழந்தைகள் எங்கு எப்படி அதன் புகாரை தெரிவிக்க வேண்டும். கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் தங்கள் திறமைகளை எவ்வாறு வளர்த்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி, மோகன் கிராம உதவி ஆய்வாளர் ஹரிஷ், மகேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், வார்டன் பிச்சை, குழந்தைகள் நல காப்பு வார்டன் நந்தினி உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×