என் மலர்
உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
- அயோடின் உப்பு அவசியம் குறித்தும், உப்பில் அயோடின் உள்ளதா? இல்லையா? கண்டறிதல் குறித்தும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறிதல் குறித்தும் செயல் விளக்கம் அளித்த னர்.
- மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளி வளா கத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் கிருஷ்ணகிரி நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம் இணைந்து உணவுப் பொருள்களில் லேபிள் நடைமுறை, கலப்படம் கண்டறிதல் மற்றும் நுகர்வோர் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் பள்ளி பொருளி யல் ஆசிரியர் திருநாவுக்கரசு அனை வரையும் வர வேற்றார்.
பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி நுகர்வோர் நலச்சங்கம் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஜாய் முன்னிலை வகித்தார்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் உணவு பொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அயோடின் உப்பு குறித்தும் அயோடின் சத்து குறைபாடினால் ஏற்படக்கூடிய குறைபாடுகள் குறித்தும், அயோடின் உப்பு அவசியம் குறித்தும், உப்பில் அயோடின் உள்ளதா? இல்லையா? கண்டறிதல் குறித்தும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறிதல் குறித்தும் செயல் விளக்கம் அளித்த னர்.
இதில் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆங்கில பேராசிரியை கீதாகோபாலன், கேந்திர வித்யாலயா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு ) பிரதீபா கவுதம், காவேரிப்பட்டணம் செஞ்சிலுவை சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உடன் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






