என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
- வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கெலமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் கலா தலைமை வகித்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டாரம் ஜெக்கேரி கிராமத்தில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் சார்பில் காலஜதா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கெலமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் கலா தலைமை வகித்தார்.ஜெக்கேரி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலையில் ஜெகதேவி விநாயகா கோலாட்ட கலை குழு பங்கேற்று வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், சொட்டு நீர் பாசனம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் அட்மா திட்டம் பற்றி கலைநிகழ்ச்சியின் மூலம் எடுத்து கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






