search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
    X

    வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கேரம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

    • திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், ஜெம் லயன்ஸ்சங்கம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்சிப் போட்டிகளை நடத்தியது.
    • பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், ஜெம் லயன்ஸ்சங்கம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்சிப் போட்டிகளை நடத்தியது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    கேரம் சங்க தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க தலைவர் குமார், பட்டேல், ஹாக்கி அகாடமி நிறுவனர் ரமேஷ்பட்டேல், கேரம் சங்க துணைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி, வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் பள்ளி ஆகியவை கோப்பைகளை வென்றன.

    18 வயது மாணவர்கள் பிரிவில் ஒற்றையரில் சர்வேஸ்வரர், இரட்டையரில் சர்வேஸ்வர், யுவமுகேஷ் ஆகிய எம்.எஸ்.பி பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×