என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் விருது வழங்கும் விழா
    X

    ஊட்டியில் விருது வழங்கும் விழா

    • மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் சத்தார் பாபு தலைமை வகித்தார்.
    • ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது.

    ஊட்டி,

    புதிய புயல் நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் ஊட்டி மனநலம் குன்றியோர் இல்லத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் சத்தார் பாபு தலைமை வகித்தார். புதிய புயல் ஆறுமுகம் வரவேற்றார். இல்ல காப்பாளர் செந்தில், ஆர்.கே. புரம் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் உலிகல் சண்முகம், ஆசிரியர் கையேடு தயாரித்த ஓவியா, ஆசிரியர் காந்தல் ஜேம்ஸ், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு பிலோமினா மற்றும் தனலட்சுமி, பொறியாளர் விஞ்ஞானி ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மகளிர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவும், ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் இல்ல பொறுப்பாளர்கள் அருள்மேரி, ரேவதி நன்றி கூறினர்.

    Next Story
    ×