search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சீராள மகாமாரியம்மன்.

    சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வள்ளுவன் தோப்பில் சீராள மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ஆம் தேதி வெள்ளிக் கிழமை காப்பு கட்டுதல்,பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர்,இளநீர்,சந்தனம், திறுநீர், தேன்,திரவியம்,மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், தீபாரா தனையும் நடைபெற்றது.தொடர்ந்து காய்கறி மற்றும் கனி அலங்கார பூஜை நடைபெற்று பின்னர் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து இன்று சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதில் திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×