search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் ஆட்டோ டிரைவர் கொலை: அக்காள் மகளை  கர்ப்பமாக்கியதால் வெட்டிக்கொன்றோம்-கைதான வாலிபர்கள் வாக்கு மூலம்
    X

    கைதான 2 பேரை படத்தில் காணலாம்.

    கடலூரில் ஆட்டோ டிரைவர் கொலை: அக்காள் மகளை கர்ப்பமாக்கியதால் வெட்டிக்கொன்றோம்-கைதான வாலிபர்கள் வாக்கு மூலம்

    • ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார்.
    • இருவரும் சிவமணியை தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

    கடலுார்:

    கடலுார் அருகே குறவன்பாளை யத்தைச்சேர்ந்தவர் சிவமணி, (வயது38). ஆட்டோ டிரைவர். திருமணமாகி, ஆண் குழந்தை உள்ளது. இவர் கிழக்கு ராமாபுரம்-நடுக்குப்பம் சாலை, வாழைத்தோப்பில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார். இதன் காரணமாக சிவமணியை கொலை செய்ய விதவை பெண், அவரது தம்பி வேல்முருகன், நண்பர் அம்பாள்புரம் சங்கர் ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி, கிழக்கு ராமாபுரம் திரவுபதியம்மன் கோவில் திருவிழாவிற்கு விதவை பெண் அழைத்ததின் பேரில், சிவமணி அங்கு சென்றார். அப்போது, விதவைபெண் , வேல்முருகன், சங்கர் ஆகியோர் சிவமணியை கோவிலுக்கு போகலாம் எனக் கூறி, ஆட்டோவில் அழைத்துச் சென்று கொலை செய்தது தெரிந்தது. விதவை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக 2 பேரை தேடிவந்தனர். அதன்படி என்.எல்.சி., சுரங்கத்தில் கனரக வாகன டிரைவரான வேல்முருகன், பெயிண்டர் சங்கர், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசில் வேல்முருகன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:- என் அக்கா மகளை சிவமணி கர்ப்பமாக்கினார். இதுகுறித்து எனது அக்கா தட்டிக் கேட்டபோது சிவமணிவாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால்சி வமணியை கொலை செய்ய திட்டமிட்டோம். பேச வேண்டும் எனக்கூறி சிவமணியை, விதவை பெண் வாழைத்தோப்பிற்கு அழைத்து வந்தார். அங்கு வந்த நானும், சங்கரும் சேர்ந்து சிவமணியுடன் மது அருந்தினோம். பின், இருவரும் சிவமணியை தாக்கியதில்,அவர் கீழே விழுந்தார். அப்போது, கத்தியால் கழுத்தறுத்து கொலைசெய்தோம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    Next Story
    ×