search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
    X

    கோவையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

    • கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
    • வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    ராமநாதபுரம் மாவட்டம் திருவடானையை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 39). ஆட்டோ டிரைவர். இவர் கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சில நாட்களாக விஜயராகவன் மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×