search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி- குண்டடம்  பகுதியில் நாளை மின்தடை
    X

    ஊத்துக்குளி- குண்டடம் பகுதியில் நாளை மின்தடை

    • துணை மின் நலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது,
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின் நலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.

    அதன்படி ஊத்துக்குளி துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாைளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம் அருகம்பாளையம், மானூர், தொட்டியவலவு, வயக்காட்டுபுதூர், ஏ.கத்தாங்கண்ணி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் செங்கப்பள்ளி துணை மின் நிலையத்துக்குட்பட்ட செங்கப்பள்ளி, விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன் பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம் குண்டடம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட சூரியநல்லூர், இராசிபாளையம், எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், காதப்புள்ளப்பட்டி, புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு. குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×