search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவாரத்தில் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    கோப்பு படம்

    தேவாரத்தில் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசாரணைக்கு பெண் தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார்.
    • இதுகுறித்து பெண் மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவா ரம் அருகில் உள்ள டி.ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் வேங்கையன். இவரது மனைவி கவுசல்யா(53). இவர் தனது வீட்டை தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த செட்டிவீரன் மகன் பெருமாளுக்கு ஒத்திக்கு விட்டிருந்தார்.

    அவர்களுக்குள் பிரச்சி னை ஏற்பட்டதால் இதுகுறித்து தேவாரம் போலீசில் கவுசல்யா புகார் அளித்தார். விசாரணைக்கு கவுசல்யா தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ளப்போ வதாக கூறினார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் கவுசல்யா விடமிருந்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கவுசல்யா மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கவுசல்யா புகாரின்பேரில் பெருமாள், அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து ள்ளனர்.

    இதனிடையே கவுசல்யாவின் கணவர் வேங்கையன், பெருமாளின் உறவினரான ரீட்டா என்பவரை தகாத வார்த்தைகளால் பேசியதால் அவர் தற்கொலைக்கு முயன்றாராம். இதுகுறித்தும் ரீட்டா அளித்த புகாரின்பேரில் தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×