search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே மினி பஸ் மீது கல்வீச்சு-4 பேரிடம் போலீசார் விசாரணை
    X
    மினி பஸ் கண்ணாடி உடைந்து கிடக்கும் காட்சி.

    கடையம் அருகே மினி பஸ் மீது கல்வீச்சு-4 பேரிடம் போலீசார் விசாரணை

    • கடையத்திலிருந்து பாப்பான்குளம் வழியாக ஏ.பி.நாடானூருக்கு மினி பஸ் ஒன்று பயணிகளை தினந்தோறும் ஏற்றி சென்று வருகின்றது.
    • நேற்று இரவு அப்பகுதி வழியே பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்றது.

    கடையம்:

    கடையத்திலிருந்து பாப்பான்குளம் வழியாக ஏ.பி.நாடானூருக்கு மினி பஸ் ஒன்று பயணிகளை தினந்தோறும் ஏற்றி சென்று வருகின்றது.

    நேற்று இரவு அப்பகுதி வழியே பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்றது. அப்போது பாப்பான்குளத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது செல்லப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த 4 பேர் திடீரென பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். கல்வீச்சில் பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமானது.

    இதுகுறித்து பஸ் டிரை வர் சுந்தரராஜ் (வயது 30), நடத்துனர் காளி ஆகி யோர் புகாரின் பேரில் ஆழ்வார்கு றிச்சி போலீசார் செல்லப் பிள்ளையார் குளத்தை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×