search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைவாசல் அருகே வாலிபர் மீது தாக்குதல்
    X

    தலைவாசல் அருகே வாலிபர் மீது தாக்குதல்

    • சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர்.
    • அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரியேரியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 22). இவர் தலைவாசல் பஸ் நிலையத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி நிலையத்தல் தட்டச்சு பயிற்சி பெறுகிறார். கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர். காயமடைந்த அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜசேகருக்கும் சத்யநாதனுக்கும் இடையே கபடி தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே ராஜசேகர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

    Next Story
    ×