search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யத்தில், மூலிகை வனத்தை கலெக்டர் ஆய்வு
    X

    மூலிகை வனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

    வேதாரண்யத்தில், மூலிகை வனத்தை கலெக்டர் ஆய்வு

    • மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் உள்ளிட்ட செடிகள்.
    • மூலிகை வனத்தில் பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கபட்டது. இந்த மூலிகை வனம் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த மூலிகை தோட்டத்தில் மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் செடிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டு செடிகள் முன்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூலிகை வனத்தில் தற்போது பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில், நேற்று வேதாரண்யம் வருகை தந்த கலெக்டர் அருண் தம்புராஜ் மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மூலிகை செடிகள் செழித்து வளர்ந்திருப்பதை கண்டு அதிகாரிகளை பாராட்டினார்.

    இது போல் மூலிகை வனம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது, தாசில்தார் ஜெயசீலன், துணை வட்டாட்சியர் வேதையன் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர்.

    Next Story
    ×