search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடுகபாளையத்தில்  ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசுமாடு
    X

    வடுகபாளையத்தில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசுமாடு

    • வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும்.
    • பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் ஹலோபிளாக் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி(வயது 62). இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புகிறார். இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த சுமார் 5 வயதான பசுமாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.

    வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும். இந்த பசுமாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. அந்த இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இது குறித்து ஈஸ்வரி கூறியதாவது:- எங்கள் வீட்டில் 5 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறோம்.இதுபோல ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது இல்லை. தற்போதுதான் இது நடந்துள்ளது. இதனை எங்கள் குடும்பத்திற்கு "தெய்வத்தின்" கருணையாக பார்க்கின்றோம். பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×