என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடுகபாளையத்தில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசுமாடு
Byமாலை மலர்9 Jan 2023 5:31 AM GMT
- வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும்.
- பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் ஹலோபிளாக் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி(வயது 62). இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புகிறார். இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த சுமார் 5 வயதான பசுமாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.
வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும். இந்த பசுமாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. அந்த இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இது குறித்து ஈஸ்வரி கூறியதாவது:- எங்கள் வீட்டில் 5 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறோம்.இதுபோல ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது இல்லை. தற்போதுதான் இது நடந்துள்ளது. இதனை எங்கள் குடும்பத்திற்கு "தெய்வத்தின்" கருணையாக பார்க்கின்றோம். பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X