search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏல விலை நிலவரம் தெரியாமல்  விவசாயிகள் அவதி
    X

    ஊழியர்கள் இல்லாமல் வெறிசோடி காணப்படும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம்.

    பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏல விலை நிலவரம் தெரியாமல் விவசாயிகள் அவதி

    • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது.
    • இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது. இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோ றும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது வழக்கம். ஏல முறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செயல்ப டுகிறது. அதில் பொருட்க ளின் தரத்துக்கு ஏற்ப அதிகபட்ச விலை, குறைந்த பட்ச விலை, சராசரி விலையென நிர்ணயித்து பொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு அதற்குரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    தற்போது கடத்த சில வாரங்களாக வியாழக்கி ழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடத்துவதில் குளறுபடி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் மதியம் நடந்து முடிந்தவுடன் மாலையில் தாங்கள் கொண்டு வந்த தேங்காய் பருப்பு என்ன விலைக்கு போனது என விவசாயிக ளுக்கு செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிந்து கொள்வார். வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களின் ஏல விலை தெரியாமல் வெள்ளிக்கிழமை விவசாயி கள் விலையை தெரிந்து கொள்ள காலை 10.30 மணிக்கு நேரில் வந்தனர். விவசாயிகளுக்கு தகுந்த பதில் கூற அங்கு பணியில் ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக இங்கு உரிய நேரத்தில் பணிக்கு பணி யாளர்கள் வருவதில்லை. இந்த அலுவலகம் பெயருக்கு மட்டுமே செயல்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே ஏலம் நடைபெறு கிறது. இங்கு விவசாயப் பொருட்கள் அழுகி போகா மல் இருக்க குளிர்சா தன வசதி கிடங்கு உள்ளது. விவ சாயிகள் மற்றும் வியாபாரி கள் தாங்கள் தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதன கிடங்கில் இருந்து பொருட் களை எடுக்க முடியா மல் போன தால் அதை விவசாயிகள் பயன்படுத்த முன் வருவ தில்லை.நேற்று முன்தினம் நடந்த தேங்காய் பருப்பு ஏல நிலவரம் வெள்ளிக்கிழமை வரை ஏல நிலவரம் தெரிய வில்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இது குறித்து அங்கு இருந்த ஊழியரிடம் கேட்ட போது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்சப்ளை அதிக வோல்டேஜ் வந்ததால் மின் இணைப்பில் இருந்த சாத னங்கள் பழுதாகியது. இது குறித்து மின்சார வாரியத்தி டம் புகார் அளிக்கப்பட் டுள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ெதரிவிக்கப்படும், என்றார்.

    Next Story
    ×