search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    கொள்ளிடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கொள்ளிடத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே ராகுல் காந்தியின் எம். பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேற்கு வட்டார தலைவர் ஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிஸ் கட்சி பொது செயலாளர் கணிவண்ணன், கிழக்கு வட்டாரத் தலைவர் பாலசுப்பிரமணியன், எஸ். சி.எஸ். டி. பிரிவின் மாவட்ட தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சித்ராசெல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய குழு துணைதலைவர் பானுசேகர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட செயலாளர்கள் தியாக கார்த்திகேயன், அசோக் கொள்ளிடம் நகர தலைவர் பிரகாசம், மாவட்ட பொருளாளர் காந்திமதி சிவராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×