என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே சாலையில் தண்ணீர் தேங்கி கிடக்கும் காட்சி.
கிருஷ்ணகிரி, தருமபுரியில் கனமழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
- சுமார் 6 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது.
- நாடுவணபள்ளி கிராமத்தில் பெய்த கனமழையால் இப்பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி நின்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் தொடர் கனமழை பெய்து வந்ததால் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி செல்லும் சாலையில் வேப்பனப்பள்ளி ஊராட்சி தொடக்கப்பள்ளி முன்பு தரை மேம்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது.
இதனால் இப்பகுதியில் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் குடிப்பள்ளி வேப்பனபள்ளி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து வசதி ஏற்பட்டது. பின்பு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் சாலையில் தேங்கி நின்ற அடைப்பு ஏற்பட்டு இருந்ததையடுத்து மாற்றுவழிகள் தண்ணீர் செல்வதற்கு வழி செய்த பின்பு 2 மணி நேரத்திற்கு மேல் பின்பு தண்ணீர் படிப்படியாக குறைந்தது.
இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த சென்றதால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் நாடுவணபள்ளி கிராமத்தில் பெய்த கனமழையால் இப்பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி நின்றது.
தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் 20-க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்து கொள்ள முடியாமல் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
மேலும் சிலர் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீடுகளை பூட்டிவிட்டு ஒரு நேர வீடுகளுக்கு சென்று உள்ளனர். காலையில் ஊர் மக்கள் தகவல் தெரிவித்த பின்பு வேப்பனப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக ரகுநாத் மற்றும் பள்ளி ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், ஒன்றிய குழு உறுப்பினர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் கௌரிசங்கர் வந்து நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
தளி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி வனப் பகுதிகளில் இருந்து உருவாகும் சின்னாறு தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ள பெருக்கெடுத்து, ஆறாக பரந்து விரிந்து வரும் சின்னாறு, சுமார் 50 அடி உயரத்திலிருந்து, நல்லூர் ஊராட்சியில் தொல்லேகாது என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.
சின்ன ஆறாக பறந்து வரும் நீரானது. இந்த இடத்தில் பாறைகளுக்கிடையில் இரண்டாக பிரிந்து இடது வலது புற காதுகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் தோற்றமளிக்கிறது.
இதனால் இந்த இடத்திற்கு தொல்லேக்காது நீர்வீழ்ச்சி என்று பெயர் ஏற்பட்டது. மேலும் இந்த ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளதால் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் புனித நீராடவும், ஈமச்சடங்கிற்காகவும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
தொடர்ந்து ஆண்டுதோறும் வற்றாத நீர்வீழ்ச்சியாக சின்ன ஆற்றில் கொட்டிக் கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் தொல்லேக் காது நீர்வீழ்ச்சி தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டு வந்தது.
தற்போது மழை தீவிரம் அடைந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி க்கோட்டை, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளிலும் பெட்டமுகிலாலம் மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், தற்பொழுது சின்னாறு அணை நிரம்பி, உபரிநீர் திறக்கப்ப ட்டுள்ளது.
இதனால் சின்னாற்றில் தண்ணீர் அதிகரித்து வர தொடங்கி யுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் இரண்டு பக்கமும் அருவி கொட்டுகிறது. இதனால் இந்த அருவியில் குளிப்பதற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கி ன்றனர். கடந்த 8 மாதத்திற்கு பிறகு தொல்லேக்காது நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து ள்ளதால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.






