search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்; 2 பேரிடம் விசாரணை
    X

    கடையநல்லூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்; 2 பேரிடம் விசாரணை

    • வேத நாராயணப்பேரி மற்றும் அலவந்தன் குளங்களுக்கு செல்லும் நீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன். அந்த கிராமத்தின் தலையாரி ரமேஷ்.

    கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பன்னீர் பேரி குளம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை பார்க்க இவர்கள் 2 பேரும் சென்றனர். அப்போது அங்கிருந்த விவசாயிகளான மேல கடையநல்லூர் கிருஷ்ணன்கோவில் கீழத்தெருவை சேர்ந்த பிரான்சிஸ்(வயது 35), ஆல்பர்ட்(45) ஆகியோர் வேத நாராயணப்பேரி மற்றும் அலவந்தன் குளங்களுக்கு செல்லும் நீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் 2 பேரும், பிரான்சிஸ், ஆல்பர்ட் ஆகியோரிடம் கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் கூறாமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×